Friday, November 24, 2006

முதல் பதிவு..

அன்பே நான் இந்த முதல் ப்ளாக்கைச் சொல்லவில்லை. நாம் பார்த்து, பழகி, கரைமணலில் கைகோர்த்து நடந்து, பின் இது காதல் என்றுணர்ந்து கண்ணோடு கண் கதைத்து மகிழ்ந்து கிடந்த நாட்களில், உன் இதழ்கள் என் கன்னத்தில் பதித்த முதல் பதிவைச் சொல்கிறேன். அந்த காலச்சுவடுகளை காதல் சிற்பங்களை நீ மறந்தாலும் என் நினைவுகள் மறவா.